சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் காவலர் குடியிருப்பில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஜெயக்குமார் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மின்சார பெட்டியிலிருந்து நேரடியாக மின்சாரத்தை எடுத்து பயன்படுத்தியதாக எழுந்த புகாரை அடுத்து மின்வாரிய அமலாக்க பிரிவினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.