ஈரோடு: ஈரோட்டில் இரவு நேரத்தில் பனி பொழிவு துவங்கி விட்டதால் ஸ்வட்டர், கம்பளி போர்வைகளின் விற்பனை அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் டிசம்பர் முதல் பிப்., மாதம் வரை பனிக் காலமாகும். ஆனால், நடப்பாண்டு முன்கூட்டியே பனிக்காலம் துவங்கிவிட்டது. மேலும் மாவட்டத்தில் பரவலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் இரவு நேரத்தில் கடுங் குளிர் வாட்டி வருவதால் குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள் என அனைத்துத் தரப்பினருமே குளிரால் அவதிப்படுகின்றனர். பனியின் காரணமாக பிரப்ரோடு, மணிக்கூண்டு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டோரத்தில் 30க்கும் மேற்பட்ட தற்காலிக கடைகளில் ஸ்வட்டர், கம்பளிப் போர்வை, தலைக் குல்லா உள்ளிட்டவைகள் விற்பனைக்காக குவித்துள்ளனர்.