சென்னை: ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ஆயிக்கவுண்டன் பாளையத்தை சேர்ந்தவர் ராஜ். இவரது மனைவி காஞ்சனா.. கர்ப்பிணியான இவர் கடந்த 28ம் தேதி விஜயமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்துள்ளனர். அப்போது, காஞ்சனாவை பரிசோதனை செய்த டாக்டர் விஜயசித்ரா, முழுமையான வலி வரும் வரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருக்கும்படி கூறி உள்ளார். பின்னர், மாலையில் காஞ்சனாவுக்கு கடுமையான வலி வந்தது. அப்போது விஜயசித்ரா பணி முடிந்து வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் பணியில் இருந்த செவிலியர் சுகன்யா என்பவர், தனியாக பிரசவம் பார்த்துள்ளார். அதில், குழந்தை முழுமையாக வெளியே வராமல் தலை மட்டும் வெளியே வந்து நின்றுள்ளது. இதனால் பயந்துபோன செவிலியர் சுகன்யா, அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு காஞ்சனாவை அனுப்பியுள்ளார். ஆனால் அங்கும் மருத்துவர்கள் இல்லை.