சென்னை : சென்னையில் இருந்து கேரளா புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது. சென்னையில் இருந்து கோழிக்கோட்டிற்கு காலை 7 மணிக்கு 59 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 63 பேருடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்டது. நடுவானில் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதாக விமான கட்டுப்பாடு அறை அதிகாரிகளுக்கு விமானி தகவல் அளித்தார். இதனால் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. இயந்திர கோளாறை உடனடியாக கண்டறிந்ததால் விமானத்திலிருந்த 63 பேரும் உயிர் தப்பினர். பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.