தஞ்சை: கஜா புயல் பாதிப்பில் சிக்கி காயமடைந்த தஞ்சை ஆவணம் பகுதியை சேர்ந்த டிட்டோ என்பவர் உயிரிழந்துள்ளார். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டிட்டோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். டிட்டோவின் குடும்பத்தினருக்கு அரசு உதவ வேண்டும் என உறவினர்கள் கோரியுள்ளனர்.