கொல்கத்தா: கொல்கத்தாவில் குடிபோதையில் ஒருவர் மீது காரை மோதி விட்டு நிற்காமல் சென்ற பெண் ஃபேஷன் டிசைனரை போலீசார் கைது செய்துள்ளனர். நேற்று அதிகாலை தனதுகாரில் அதிவேகத்தில் சென்ற ஃபேஷன் டிசைனரான அதிதி அகர்வால் சாலையில் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த ஒருவர் மீது மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். எனினும் காரை நிறுத்ததாத அதிதி அருகில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலுக்குள் சென்று விட்டார். மேலும் சி.சி.டி.வி. காட்சிகளின் மூலம் அதிதியை கண்டுபிடித்த போலீசார், அவரை கைதுசெய்தனர்.