சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த காலங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பை பார்வையிட வந்த மத்திய குழுவானது சரியாக ஆய்வு செய்யவில்லை. இதனால் தமிழகத்துக்கான நிவாரண நிதி முழுமையாக கிடைக்கவில்லை. இந்த முறை மத்திய குழுவுடன் தமிழக அரசின் அதிகாரிகள் செல்லும்போது பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பார்வையிட வேண்டும். குறிப்பாக அனைத்து கிராமப்புறங்களுக்கும் சென்று பார்வையிட வேண்டும்.