கஜா புயல் பாதிப்பு அனைத்து பகுதிகளுக்கும் சென்று மத்திய குழு பார்வையிட வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

சென்னை: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த காலங்களில் ஏற்பட்ட புயல் பாதிப்பை பார்வையிட வந்த மத்திய குழுவானது சரியாக ஆய்வு செய்யவில்லை. இதனால் தமிழகத்துக்கான நிவாரண நிதி முழுமையாக கிடைக்கவில்லை. இந்த முறை மத்திய குழுவுடன் தமிழக அரசின் அதிகாரிகள் செல்லும்போது பாதிக்கப்பட்ட அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பார்வையிட வேண்டும். குறிப்பாக அனைத்து கிராமப்புறங்களுக்கும் சென்று பார்வையிட வேண்டும்.

இக்குழு பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஆய்வு செய்து, உண்மை தன்மைக்கு ஏற்ப அறிக்கையை தயார் செய்து மத்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். இதுவே ஒட்டு மொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: