கோவை: நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு டிஎஸ்பியாக இருந்த விஷ்ணுபிரியா, கடந்த 2015ல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கு உயரதிகாரிகளின் நெருக்கடியே காரணம் என கூறப்பட்டது. இதுகுறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோரி விஷ்ணுபிரியாவின் தந்தை ரவி வழக்கு தொடர்ந்தார். அதை தொடர்ந்து இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.ஆனால், எந்த முகாந்திரமும் இல்லாததால் வழக்கை கைவிடுவதாக சிபிஐ அறிவித்தது.