5 மாநில தேர்தல்களில் காங்., பெறும் வெற்றியால் ராகுலின் மதிப்பு கூடும் : வீரப்ப மொய்லி கருத்து

டெல்லி: தேசிய அளவில் காங்கிரசுக்கு ஆதரவு பெருகி வருவதாக கூறியுள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் வீரப்ப மொய்லி, அதே சமயம் பாரதிய ஜனதா மீதுள்ள அதிருப்தியால் அக்கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தனது கூட்டணி கட்சிகளை இழந்து வருவதாக கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணியை சிறப்பாக செய்து வருவதாக கூறினார். யார் அடுத்த பிரதமர் என்பது தொடர்பாக பா.ஜ-விற்கு எதிராக அமைய உள்ள கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. அனைவரும் மோடி மற்றும் பா.ஜ.,விற்கு எதிராக ஒன்றுபட்டு வருகின்றனர். மோடி மற்றும் பாரதிய ஜனதாவை எதிர்ப்பதே தங்களின் ஒரே நோக்கம் என்றார்.

பிரதமர் பதவிக்கு ராகுல் காந்திக்கு மாற்று என்ற கேள்விக்கு தாம் பதிலளிக்க விரும்பவில்லை என்ற அவர், பிரதமராவதற்கு சரியான, சிறப்பான நபர் ராகுல் மட்டுமே என குறிப்பிட்டார். தேசிய அளவில் பா.ஜ.,வை எதிர்க்கும் கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல்களிலும் காங்கிரஸ் தான் வெற்றி பெறும். இந்த வெற்றி ராகுலுக்கு கூடுதல் மதிப்பையும், பலத்தையும் பெற்று தரும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: