சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 2000 கிலோ இறைச்சி நாய்க்கறியா அல்லது ஆட்டுக் கறியா என்பதை கண்டறிய டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இருந்து கடந்த 18ம் தேதி எழும்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரயிலில் 20 பார்சல்களை உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அந்த பார்சல்களில் துர்நாற்றம் அடித்தபடி மாட்டு இறைச்சி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் பார்சல்களில் இருந்த இறைச்சியை எடுத்து சோதனை செய்ததில் நாய் இறைச்சியாக இருக்கும் என்றும், மாட்டு இறைச்சியுடன் நாய் இறைச்சியை சேர்த்து பார்சல்களில் அனுப்பியிருக்க கூடும் என்றும் சந்தேகம் அடைந்தனர்.