ஈரோடு: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு பாடநூல்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு செங்குந்தர் பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு 26 ஆயிரத்து 297 மாணவ, மாணவிகளுக்கு ரூ.9.74 கோடி மதிப்பிலான இலவச சைக்கிள் வழங்கினார். இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது: எந்த அரசு பள்ளிகளையும் மூடும் எண்ணம் அரசுக்கு இல்லை. பல பள்ளிகளில் ஒரு மாணவர், 2 மாணவர்கள் என குறைந்த எண்ணிக்கையில் உள்ளனர்.