சென்னை: இந்திய தேசிய லீக் கட்சியினர் நேற்று வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர். தொடர்ந்து, அக்கட்சியின் மாநில செயலாளர் ஷாகீர்கான் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் அமைதி மாநிலமாக உள்ளது. அதை கெடுக்கும் வகையில் பாஜவை சேர்ந்த கல்யாணராமன் தனது முகநூலில் முஸ்லிம்கள் மற்றும் நபிகள் குறித்து தவறான பதிவுகளை செய்து வருகிறார். எனவே அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். அவர் மீது பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.