2 மகன்களை 2 ஆயிரத்திற்கு விற்ற தந்தை கொத்தடிமைகளாக வாத்து மேய்த்தவர்கள் மீட்பு: பள்ளியில் சேர்த்தார் சப்-கலெக்டர்

திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம், ஆம்பூர், கைலாசகிரி மலையடிவாரத்தில் உள்ள பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி வள்ளி. 5 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த சரவணன், மகன்கள் அருண்குமார்(8), செல்வா(7) ஆகியோரை, கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிநாயணஅள்ளி தேவசமுத்திரம் பகுதியை சேர்ந்த பாபு என்பவரிடம் 2ஆயிரத்திற்கு விற்றுள்ளார். அவர்களை பாபு பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று வாத்து மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தி கொத்தடிமைகளாக நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் சரவணன் இறந்தார். அதன்பின் வள்ளி புகாரின்படி கிருஷ்ணகிரி போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர்  2 சிறுவர்களையும்  மீட்டு திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா பங்கஜமிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து திருப்பத்தூர் அரசு பூங்கா மேல் நிலைப்பள்ளியில் இருவரையும் சேர்க்க சப் கலெக்டர் ஏற்பாடு செய்தார். அதன்படி, அருண்குமார் 3ம் வகுப்பிலும், செல்வா 2ம் வகுப்பிலும் சேர்க்கப்பட்டனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: