திருப்பத்தூர்: வேலூர் மாவட்டம், ஆம்பூர், கைலாசகிரி மலையடிவாரத்தில் உள்ள பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி வள்ளி. 5 மகன்கள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த சரவணன், மகன்கள் அருண்குமார்(8), செல்வா(7) ஆகியோரை, கிருஷ்ணகிரி மாவட்டம், கட்டிநாயணஅள்ளி தேவசமுத்திரம் பகுதியை சேர்ந்த பாபு என்பவரிடம் 2ஆயிரத்திற்கு விற்றுள்ளார். அவர்களை பாபு பல்வேறு பகுதிகளுக்கு அழைத்து சென்று வாத்து மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தி கொத்தடிமைகளாக நடத்தியுள்ளனர்.