கொள்ளிடம்: நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கொள்ளிடம் ஆற்றின் கரையோர கிராமங்களில் இரவு நேரங்களில் தொடர்ந்து வாகனங்கள் மூலம் மணல் திருட்டு நடந்து வந்தது. கடந்த 1 மாத காலத்தில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்த 25க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 20க்கும் மேற்பட்டோர் கொள்ளிடம் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இருந்தும் இரவு நேரங்களில் மணல் திருடுவது தொடர் கதையாகவே இருந்து வந்தது. பொதுப்பணித்துறையினர் வருவாய் துறையினர், வனத்துறையினர் மற்றும் போலீசார் பலமுறை எச்சரித்தும் மணல் திருட்டை தடுக்க முடியவில்லை. நேற்று பொதுப்பணித்துறையின் சீர்காழி உதவி செயற்பொறியாளார் ராஜேந்திரன், வருவாய் துறை அதிகாரிகள், வனத்துறை ஊழியர்கள் மற்றும் கொள்ளிடம் போலீசார் குத்தவக்கரை ரயில்வே பாலம், சந்தப்படுகை, நாதல்படுகை, முதலைமேடு திட்டு, வாடி, பட்டியமேடு,