மதுரை: மீனாட்சியம்மன் கோயில் சொத்துக்களை மீட்கக்கோரிய வழக்கில், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.
திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை மீனாட்சியம்மன் கோயில் மற்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகியவற்றின் தர்ம காரியங்களுக்காக ஏராளமான சொத்துக்கள் தானமாக வழங்கப்பட்டது. மதுரை மாட்டுத்தாவணி பகுதியிலுள்ள சுமார் 80 ஏக்கர் நிலங்கள் பல ஆயிரம் கோடி மதிப்புள்ளது. ஆனால், இவை உரிய அனுமதியின்றி விற்பனை செய்யப்பட்டுள்ளன. புகாரின்பேரில் இந்த நிலங்களை மீட்க குழு அமைக்கப்பட்டது.