திருநங்கை வீட்டில் திருட்டு

சென்னை: திருநங்கை வீட்டின் பூட்ைட உடைத்து 0 சவரன் நகையை திருடிச் சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை போர் நினைவு சின்னம் அருகே உள்ள அன்னை சத்யா நகரை சேர்ந்தவர் அலேகா (35). திருநங்கையான இவர், ேநற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிவிட்டு அடையாரில் உள்ள தனது சக நண்பர்களை பார்க்க  சென்று விட்டார். பின்னர் இரவு வீட்டிற்கு வந்த ேபாது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த 0 சவரன் நகை மாயமாகி இருந்தது. இதுகுறித்து கோட்டை காவல் நிலையத்தில் அலேகா புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அன்னை சத்யா நகரில் பரபரப்பு ஏற்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: