தாம்பரம்: தாம்பரம் அருகே தோண்டப்பட்ட மழைநீர் வடிகால் பள்ளத்தில் விழுந்த பிரைட் என்பவர் உயிரிழந்தார். திருவஞ்சேரியில் பைக்கில் சென்ற பிரைட், மணிகண்டன் ஆகியோர் பள்ளத்தில் விழுந்துள்ளனர். பலத்த காயம் அடைந்த மணிகண்டன் என்பவர் சிகிச்கைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.