சென்னை: விழுப்புரத்தில் கடந்த 2014ம் ஆண்டு எஸ்.இ.டிசி, டி.என்.எஸ்.டி.சி அரசு பேருந்துகள் எதிர் எதிரே மோதி விபத்து ஏற்பட்டது. அந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த மோகன், செல்வகுமார் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். பின்னர் மோகன் உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழந்த மோகனின் மனைவி தனலட்சுமி, மகன் சாந்தகுமார், தாய் பார்வதி ஆகியோர் ரூ.40 லட்சம் இழப்பீடு கோரியும். காயமடைந்த செல்வகுமார் 12 லட்சம் இழப்பீடு கோரியும் சென்னையில் உள்ள மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.