சென்னை: சர்கார் பட போஸ்டரை கிழித்தவர்களில் எவ்வளவு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? என்று அரசுக்கு நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார். முருகதாஸ் ஜாமின் வழக்கில் அரசு வழக்கறிஞரிடம் கேள்வியெழுப்பிய நீதிபதி, சென்சார் அனுமதி பெற்று வெளியிடப்பட்ட சர்கார் படத்தை எதிர்ப்பது ஏன்? என கேட்டுள்ளார். சர்கார் படக் காட்சிகளில் என்ன விதிமீறல் உள்ளது என்று நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.