சென்னை: சர்கார் பட சர்ச்சை தொடா்பாக இயக்குநர் முருகதாஸை கைது செய்ய போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியான நிலையில், இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அதிகாரிகள் அவருக்கு பாதுகாப்பு கொடுக்கவே போலீஸார் அவரது வீட்டில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். சர்கார் படத்தில் இடம் பெற்ற அரசியல் வசனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று அதிமுக-வினர் போராட்டம் நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.