கூடலுார்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த தேவாலா அரசு பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில், ஆதிவாசி பழங்குடியின மாணவ, மாணவிகள் கலாச்சார நடனம் ஆடி தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினர். ஆதிவாசி இன மக்கள் அதிகம் வசிக்கும் கூடலூர்.பந்தலூர் பகுதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடுவது கிடையாது. ஆனால் இவர்களது குடியிருப்புகளை சுற்றியுள்ள பெரும்பாலான மக்கள் தீபாவளி பண்டிகையை பட்டாசு, இனிப்பு மற்றும் புத்தாடைகளுடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். பொருளாதாத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள இவர்களை மகிழ்விக்கும் வகையில் இந்த ஆண்டு தேவாலா பள்ளியில் தீபாவளியை கொண்டாட ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் முடிவு செய்திருந்தனர்.