தாம்பரத்தில் சுகாதாரம், வெள்ளத்தடுப்பு பணி ஐஏஎஸ் அதிகாரி திடீர் ஆய்வு

தாம்பரம்: காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரி முனியநாதன் ஐஏஎஸ் நேற்று காலை தாம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுகாதாரம் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளை திடீர் ஆய்வு மேற்கொண்டார்.  அப்போது, தாம்பரம் ரங்கநாதபுரம் 7வது தெருவில் உள்ள வீடுகளில் கொசுப்புழுக்கள் உள்ளதா எனவும் ஒவ்வொரு வீடுகளிலும் தினமும் நகராட்சி அதிகாரிகள் முறையாக வந்து கொசு மருந்துகள் மற்றும் கொசுத்தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கின்றார்களா என ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பாரதிதாசன் நகர் மற்றும் சிடிஓ காலனி பகுதிகளில் நடந்து வரும் வெள்ளத்தடுப்பு பணிகள் இடங்களை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தவும், மேலும் சில பணிகளை மாற்றியமைக்கவும் உத்தரவிட்டார். ஆய்வின்போது, தாம்பரம் நகராட்சி ஆணையர் கிருஷ்ணமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் ஆல்பர்ட் அருள்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: