புதுவண்ணாரப்பேட்டை: ஜெய்ப்பூரை சேர்ந்தவர் பிரஜோஷ் (27). மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர். இவருக்கு திருமணமாகிவிட்டது. குடும்பத்தினர் ஜெய்ப்பூரில் உள்ளனர். புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள மத்திய தொழில்பாதுகாப்பு படை குடியிருப்பில் தங்கி சென்னை உயர்நீதிமன்றத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார். கடந்த 31ம் தேதி உயர்நீதிமன்றத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட பிரஜோஷ், அதன்பிறகு மாயமாகிவிட்டார்.