ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பசும்பொன்னில் சுழலும் கேமராக்களுடன் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கமுதி, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளை ட்ரோன் கண்காணிப்பு விமானங்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு ராமநாதபுரம் பகுதிக்கு வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.