ராமநாதபுரம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை ஒட்டி பாதுகாப்பு பணிகள் தீவிரம்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்த பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பசும்பொன்னில் சுழலும் கேமராக்களுடன் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கமுதி, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளை ட்ரோன் கண்காணிப்பு விமானங்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை கொண்டு ராமநாதபுரம் பகுதிக்கு வரும் வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் நாளை 111வது ஜெயந்தி விழாவும், 56வது குருபூஜை விழாவும் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதனால் பசும்பொன் பகுதி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: