சென்னை: சென்னை காவல்துறை சார்பில் பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிசிடிவி கேமராக்களின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைக்கப்பட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக, நேற்று காலை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விசுவநாதன் மாம்பலம் காவல் நிலைய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறை, காத்திருப்பாளர் அறை, 8 வடிவிலான நடைபாதையை திறந்து வைத்து பார்வையிட்டர். இதனை தொடர்ந்து தி.நகர் காவல் மாவட்டத்தில் உள்ள 15 பீட் காவலர்களுக்கு கேமரா பொருத்தப்பட்ட அதி நவீன உபகரணங்கள் அடங்கிய ஜாக்கெட்டை வழங்கினார்.