சென்னை : டிடிவி தினகரன் பேச்சை கேட்டதால் இழக்கக் கூடாததை இழந்து 18 பேரும் துயரத்தில் உள்ளதாக வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். தினகரனால் 18 பேருக்கும் மீண்டும் எம்.எல்.ஏ. பதவியை பெற்றுத்தர முடியுமா என்று கேள்வி எழுப்பிய அவர், 18 பேருக்கு தான் தற்போது இழப்பு என்றும் தினகரனுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறினார்.