நீட் வினாத்தாள் தொடர்பான வழக்கு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை: எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு வினா தாள்களை குளறுபடி இல்லாமல் தயாரிக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த நீட் நுழைவு தேர்வு வினா தாளில் தமிழ் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக தமிழக மாணவர்கள் பெரும் பிரச்சனையை சந்தித்தார்கள்.

இந்நிலையில் நீட் வினா தாள்களில் குளறுபடி இல்லாமல் தயாரிக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பினை ஒத்திவைத்தது. தீர்ப்பில் நீட் தேர்வு தொடர்பாக பல்வேறு அறிவுறுத்தல்களை நீதி மன்றம் வழங்க வேண்டும் என்று எதிர்பாக்கப்படுகிறது.  

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: