சென்னை: எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவு தேர்வு வினா தாள்களை குளறுபடி இல்லாமல் தயாரிக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. கடந்த நீட் நுழைவு தேர்வு வினா தாளில் தமிழ் மொழி பெயர்ப்பில் ஏற்பட்ட குழப்பத்தின் காரணமாக தமிழக மாணவர்கள் பெரும் பிரச்சனையை சந்தித்தார்கள்.