வடசென்னை படத்தில் ஆபாச வசனங்கள்: இயக்குநர் வெற்றிமாறன் மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமூக நீதிக்கான வழக்கறிஞர்கள் சங்க தலைவர் சார்லஸ் அலெக்ஸாண்டர் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 17ம் தேதி “வடசென்னை” என்ற தமிழ்  திரைப்படம் இயக்குநர் வெற்றிமாறனால் இயக்கப்பட்டு தமிழகத்தின் பெரும்பாலான திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. வடசென்னை திரைப்படத்துக்கு மத்திய தணிக்கை குழு “ஏ” சான்று வழங்கி உள்ளது. சமூக அக்கறை  இல்லாமல் பார்வையாளர்களின் மனதை புண்படுத்தி காயப்படுத்தும் நோக்கில் வெற்றிமாறன் வசனங்கள் எழுதி இருக்கிறார்.

பொது இடங்களில் ஆபாச வார்த்தைகள் பேசுவது, பாடுவது போன்றவை இந்திய தண்டனை சட்டம் 1860 பிரிவு 294 கீழ் தண்டிக்ககூடிய குற்றமாகும். இதுகுறித்து மத்திய தணிக்கை குழு விளக்கம் ேகட்டுள்ளது. தமிழ் சினிமா  வரலாற்றிலேயே முதல் முறையாக தீய நோக்கத்துடன் தவறு என்று தெரிந்தே செய்த வெற்றிமாறன் மீது  சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: