வேப்பூர்: வேப்பூர் அருகே தண்டவாளத்தை சேதப்படுத்தி ரயில்ளை கவிழ்க்க சதி நடந்துள்ளது. தண்டவாளத்தை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கூத்தக்குடி ரயில் நிலையம் உள்ளது. நேற்று முன்தினம் பிற்பகல் 2 மணியளவில் விருத்தாசலத்தில் இருந்து சேலம் நோக்கி சென்ற பாசஞ்சர் ரயில் கூத்தக்குடிக்கு முன்னதாக 200 மீட்டர் தூரத்தில் திடீரென நிறுத்தப்பட்டது. தண்டவாளத்தில் உள்ள இணைப்பு கிளிப்களை மர்ம நபர்கள் யாரோ கழற்றி அருகிலேயே வைத்துள்ளனர். இதைப்பார்த்த டிரைவர் உடனே ரயிலை நிறுத்தி உள்ளார். பின்னர் கீழே இறங்கி பார்த்தபோது சுமார் 20 இரும்பு கிளிப்களை மர்ம நபர்கள் கழற்றி தண்டவாளத்தில் வைத்துள்ளது தெரியவந்தது.