சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் பொறுப்பேற்பு

சென்னை, அக். 20: தமிழக தலைமைக் குற்றவியல் வக்கீலாக ஏ.நடராஜன் நேற்று பொறுப்பேற்றார். சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் அனைத்து மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றங்களில் அரசுத் தரப்பில் ஆஜராகும் குற்றவியல் வக்கீல்களுக்கு  தலைமை குற்றவியல் வக்கீலாக மூத்த வக்கீல் ஏ.நடராஜனை நியமனம் செய்து தமிழக அரசு கடந்த  திங்கள் கிழமை அரசாணை பிறப்பித்தது.   இதையடுத்து, அவர் நேற்று உயர் நீதிமன்றத்தில் உள்ள அரசு வக்கீல்களுக்கான அலுலகத்தில் தலைமைக் குற்றவியல் வக்கீலாக பொறுப்பேற்றார். அவருக்கு அட்வகேட் ஜெனரல், கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடர்கள், அரசு வக்கீல்கள், மூத்த வக்கீல்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: