வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பில் உள்ள முத்தாலம்மன் திடலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனரில், ‘‘அதிமுக தென்காசி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தி முருகேசனை காணவில்லை. காணாமல் போன நாள் 2014, மே 30, நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை பெற்றுச் சென்றவர் திரும்ப வரவே இல்லை. காணாமல் போய் விட்டார். வத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ள சிற்றூர் மற்றும் பேரூராட்சிகளுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி வந்ததாக தெரியவில்லை. கண்டுபிடித்து கொடுத்தாலோ, இருக்கும் இடம் குறித்து aதகவல் அளித்தாலோ தக்க சன்மானம் வழங்கப்படும்... இவண்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, வத்திராயிருப்பு ஒன்றியம்,’’ என குறிப்பிடப்பட்டுள்ளது.