புகார் எதிரொலியாக ஓசூர் ரயில் நிலையத்தில் வழங்கும் டிக்கெட்டில் தமிழ் இடம்பெற்றது

ஓசூர்: புகார் எதிரொலியாக ஓசூர் ரயில் நிலையத்தில் வழங்கும் டிக்கெட்டில் தமிழ் இடம்பெற்றுள்ளது. ஓசூர் ரயில் நிலையத்தில் வழங்கப்படும் பயண சீட்டுகளில் தமிழ் இடம்பெறாததை கண்டு அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனையடுத்து Aseer achary அவர்களிடம் காலையில் ட்விட்டர் மூலம் புகார் அளிக்கப்பட்டது, அதன் எதிரொலியாக உடனடியாக ஓசூர் ரயில் நிலையத்தில் வழங்கும் டிக்கெட்டில் தமிழ் இடம்பெற்றுள்ளது.  முன்னதாக காலையில் தினகரன் நாளிதழில் இதைப்பற்றி செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இருந்தாலும் ரயில்வே பொறுத்தவரை தென்மேற்கு ரயில்வேயின் பெங்களூரு கோட்டத்தின் கீழ் வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: