சென்னை :நவராத்திரி விழா அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளைக்கு அக்டோபர் 13 முதல் அக்டோபர் 21 வரை தசரா விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை கால அவசர வழக்குகள் அக்டோபர் 16 ம் தேதியன்று விசாரிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் சி.குமரப்பன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னையில் 4 நான்கு நீதிபதிகளும், மதுரையில் 3 நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள்.