ரஜினி மக்கள் மன்றத்திற்கு 47 ஆயிரம் பூத் கமிட்டி அமைப்பு

சென்னை: ரஜினி மக்கள் மன்றத்திற்கு இதுவரை 47 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகிகள் கூறியிருக்கின்றனர். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் டாக்டர் இளவரசன், ஓயவு பெற்ற காவல் அதிகாரி ராஜசேகர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் தலைமையில் கடந்த 5ஆம் தேதி முதல் மாவட்ட நிர்வாகிகளுக்கான கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் தமிழகத்தில் உள்ள 66,627 பூத் கமிட்டிகளில் 47 ஆயிரம் பூத் கமிட்டிகளை நியமித்து விட்டதாக மாவட்ட நிர்வாகிகள் கூறியுள்ளனர். இதுவரை 70 சதவீத பூத் கமிட்டி வேலைகள் முடிவடைந்த நிலையில் மீதம் இருக்கக்கூடிய பூத் கமிட்டிகளை விரைவில் முடிக்க மாவட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கிறது.                     

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: