தூத்துக்குடி: பத்திரிக்கை தர்மத்தை மீறும் போது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டிருக்கிறது என அமைச்சர் கடம்பூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், யாருடைய மனதையும் புண்படுத்தும் வகையில் விமர்சனம் இருக்கக் கூடாது என்பதே பத்திரிக்கை தர்மம் எனக் கூறினார். தனிநபர் விமர்சனம் என்பதை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.