சென்னை: நடிகர் மன்சூர் அலிகானின் 2-வது மற்றும் 3-வது மனைவிகள் இடையே ஏற்பட்ட வாய்த்தகராறு கைகலப்பில் முடிந்தது. 2-வது மனைவி தாக்கியதில் 3-வது மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான வில்லன்களில் நடிகர் மன்சூர் அலிகான் மிக முக்கியமானவர். இவர் தனது தனித்துவமான வில்லத்தனத்தால் பிரபலமானவர். கேப்டன் பிரபாகரன் திரைப்படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமாக்கினார். தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபகாலமாக மக்கள் பிரச்சனைக்காக மன்சூர் அலிகான் குறை கொடுத்து வருகிறார். குறிப்பாக ஸ்டெர்லைட் ஆலை குறித்தும், சேலம்-சென்னை இடையிலான பசுமைவழிச் சாலை குறித்து இவர் சர்ச்சைக்குறிய கருத்துகளை தெரிவித்ததாக போலீசாரால் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.