உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே பரமன்குறிச்சி மெயின் பஜாரில் திருச்செந்தூர் போலீசார் நேற்று முன்தினம் மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பரமன்குறிச்சி மெயின் பஜாரில் பைக்கில் வந்த வாலிபர் ஒருவர், போலீசார் சோதனையில் ஈடுபடுவதை கண்டதும் உடனடியாக தனது பைக்கை திருப்பினார். இதைப்பார்த்து ஆவேசமடைந்த போலீஸ்காரர், தனது கையில் இருந்த லத்தியை தூக்கி வீசினார். ஆனால், அதற்குள் பைக் கடந்து விடவே அவ்வழியே நடந்து சென்ற மீன் வியாபாரியான ஆலந்தலையைச் சேர்ந்த சீலி (57) என்பவர் மீது லத்தி விழுந்தது.