வேலூர் : வேலூர் அடுத்த மேல்மொனவூர் ஈஸ்வரன் தெரு பகுதியை சேர்ந்த வெங்கடேசன் என்பவர் தனது வீட்டியேலே 2 பெண் குழந்தைகளை (7 வயது, 9-வயது குழந்தைகள்) தூக்கிட்டு கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடன் தொல்லை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பின்னர் சடலத்தை கைபற்றி விரிஞ்ஞிபுரம் காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர்.