கண்டலேறு அணையில் திறக்கப்படும் கிருஷ்ணா நீர் ஆந்திரா கால்வாய் பகுதிகளில் திருடப்படுவதை தடுக்க வியூகம்: தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி ஆந்திரா பயணம்

சென்னை: கண்டலேறு அணையில் திறக்கப்படும் கிருஷ்ணா நீர் ஆந்திரா எல்ைலயோர பகுதிகளில் திருட்டை தடுக்க வியூகம் வகுக்க தமிழக  பொதுப்பணித்துறை அதிகாரி ஆந்திரா அதிகாரிகளிடம் கோரிக்ைக விடுத்துள்ளார். சென்னை மாநகர் மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய நான்கு ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 டிஎம்சி  ஆகும். இதை தவிர்த்து ஒப்பந்தப்படி தெலுங்கு கங்கா திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நீரும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. ஆண்டுக்கு 12 டிஎம்சி வீதம்  கிருஷ்ணா நீர் வழங்கப்பட வேண்டும். ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் வழங்க வேண்டும்.இந்த நிலையில், கடந்த ஜூலை 1ம் தேதியில் முதல் தவணை காலம் தொடங்கியது. இந்த தவணை காலத்தில் 8 டிஎம்சி தர வேண்டும். ஆனால், கண்டலேறு அணையில் நீர் இருப்பு  குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.இந்த நிலையில், சென்னை மாநகரில் உள்ள 4 ஏரிகள் வறண்டு வந்தது. குறிப்பாக, 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த  ஏரிகளில் 0.95 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளது.  இந்த நீர் 12 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே, கிருஷ்ணா நீர் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இதை தொடர்ந்து சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஜெயராமன் ஆந்திர நீர்வளத்துறை தலைமை பொறியாளரை தொலைபேசி மூலம் தொடர்பு  கொண்டு தண்ணீர் திறக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், பொதுப்பணித்துறை அரசு செயலாளர் பிரபாகர் ஆந்திர நீர்வளத்துறை செயலாளருக்கு தண்ணீர்  திறந்து விடக்கோரி கடிதம் எழுதியதாக தெரிகிறது.

இந்த நிலையில், சமீபத்தில் தென்மேற்கு பருவமழை தாக்கம் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால், அங்குள்ள  அணைகளில் நீர் வரத்து அதிகரித்தது. இதை தொடர்ந்து  சைலம் அணையில் இருந்து சோம சீலா அணைக்கு நீர் திறக்கப்பட்டது. அங்கிருந்து உடனடியாக கண்டலேறு  அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால், 68 டிஎம்சி கொள்ளளவு கொண்ட கண்டலேறு அணையில் 9.16 டிஎம்சியாக நீர் இருப்பு உயர்ந்தது. ஒப்பந்தபடி 8 டிஎம்சி  மேல் இருந்தால் மட்டுமே தண்ணீர் திறக்க முடியும்.இந்நிலையில், கண்டலேறு அணையில் இருந்து நேற்றுமுன்தினம் மதியம் 2 மணியளவில் 300 கன அடியாக நீர் திறக்கப்பட்டது. இந்த நீர் திறப்பு நேற்று 350  கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. இன்று 500 கனஅடியாக அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணா நீர் நேற்று மாலை 5 மணி நிலவரப்படி 40  கி.மீட்டரை தாண்டி வந்திருப்பதாக கூறப்படுகிறது.   ஆந்திர கால்வாயோர பகுதிகளில் கிருஷ்ணா நீர் திருட்டை தடுக்க வியூகம் வகுக்க தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சுப்பாராவ் ஆந்திரா சென்றுள்ளார்.  அங்குள்ள அதிகாரிகளை சந்தித்து போலீசார் உதவியுடன் தண்ணீர் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். இந்த நிலையில்,  தமிழக எல்லையான ஜூரோ பாயிண்ட்டிற்கு 4 நாட்களில் தண்ணீர் வந்தடையும் என்பதால் தமிழக கால்வாய் பகுதிகளில் மராமத்து பணி நடந்து வருகிறது என்று  பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: