சென்னை: கண்டலேறு அணையில் திறக்கப்படும் கிருஷ்ணா நீர் ஆந்திரா எல்ைலயோர பகுதிகளில் திருட்டை தடுக்க வியூகம் வகுக்க தமிழக பொதுப்பணித்துறை அதிகாரி ஆந்திரா அதிகாரிகளிடம் கோரிக்ைக விடுத்துள்ளார். சென்னை மாநகர் மக்களின் குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய நான்கு ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 டிஎம்சி ஆகும். இதை தவிர்த்து ஒப்பந்தப்படி தெலுங்கு கங்கா திட்டத்தின் மூலம் கிருஷ்ணா நீரும் சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்கிறது. ஆண்டுக்கு 12 டிஎம்சி வீதம் கிருஷ்ணா நீர் வழங்கப்பட வேண்டும். ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சியும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சியும் வழங்க வேண்டும்.இந்த நிலையில், கடந்த ஜூலை 1ம் தேதியில் முதல் தவணை காலம் தொடங்கியது. இந்த தவணை காலத்தில் 8 டிஎம்சி தர வேண்டும். ஆனால், கண்டலேறு அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்ததால் தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.இந்த நிலையில், சென்னை மாநகரில் உள்ள 4 ஏரிகள் வறண்டு வந்தது. குறிப்பாக, 11 டிஎம்சி கொள்ளளவு கொண்ட இந்த ஏரிகளில் 0.95 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ளது. இந்த நீர் 12 நாட்களுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே, கிருஷ்ணா நீர் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.இதை தொடர்ந்து சென்னை மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் ஜெயராமன் ஆந்திர நீர்வளத்துறை தலைமை பொறியாளரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தண்ணீர் திறக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், பொதுப்பணித்துறை அரசு செயலாளர் பிரபாகர் ஆந்திர நீர்வளத்துறை செயலாளருக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி கடிதம் எழுதியதாக தெரிகிறது.