சென்னை: உம்ரா விசாவில் சவுதி அரேபியா முழுவதும் பயணிக்க அந்நாட்டு மன்னர் அனுமதி அளித்துள்ளதாக அகில இந்திய ஹஜ் அசோஷியேன் தலைவர் அபுபக்கர் தெரிவித்துள்ளார். அகில இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:உம்ரா செய்வதற்கு சவுதி அரேபியா செல்பவர்கள் மக்காவுக்கும் மதினாவுக்கு மட்டும் தான் செல்ல முடியும். வேறு எந்த நகரத்துக்கு உள்ளும் செல்ல முடியாது. மக்காவுக்கு அருகில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடமான தாயிப் நகரத்துக்குள் அரசுக்கு தெரியாமல் தான் செல்ல முடியும். அதிகாரிகளுக்கு தெரிந்து விட்டால் எல்லையிலேயே திருப்பி அனுப்பி விடுவார்கள். இதனால் பலர் ஏமாற்றத்துடன் திரும்புவார்கள்.