ராமேஸ்வரம்: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு உருவான நிலையில் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன், தனுஷ்கோடி, ராமேஸ்வரம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது. தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. அரிச்சல்முனை கடல் பகுதியில், கடல் நீர் அதிகளவில் கரையேறியுள்ளது. அரிச்சல்முனை சென்றால் சுற்றுலாப்பயணிகள் கடலில் இறங்குவார்கள் என்பதாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும் மாவட்ட நிர்வாகம் அங்கு செல்ல நேற்று தடை விதித்தது. இதனால் நேற்று ராமேஸ்வரம் வந்த ஏராளமான சுற்றுலாப்பயணிகள், தங்களது வாகனங்களில் தனுஷ்கோடி சென்றபோது பணியில் இருந்த போலீசார், தனுஷ்கோடியிலுள்ள சேதமடைந்த சர்ச் பகுதி வரை செல்ல அனுமதித்தனர்.