சென்னை: ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, தமிழக அரசை கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருவதால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் லாரி தொழில்களை முடக்கி தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக ஈஸ்வரன் கூறியுள்ளார்.