பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க தமிழக அரசு உத்தரவிட வேண்டும்: ஈஸ்வரன்

சென்னை: ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க, தமிழக அரசை கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வருவதால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரிக்கும்  சூழல் உருவாகியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் லாரி தொழில்களை முடக்கி தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக்கியுள்ளதாக ஈஸ்வரன் கூறியுள்ளார்.

ஆந்திரா, ராஜஸ்தான், தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அம்மாநில முதலமைச்சர்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைத்து உத்தரவிட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த மாநிலங்களைப் போல, தமிழக அரசும், தமிழக முதலமைச்சரும் பெட்ரோல், டீசல் விலையை உடனடியாக குறைக்க  உத்தரவிடுமாறு  அறிக்கையில் ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: