தூத்துக்குடி : தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 10 பொது நல வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. முன்னதாக ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடியவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. மே 22ம் தேதி போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.