கடலூர்: கடலூர் அருகே உள்ள பெரியகாட்டுப்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி அர்ச்சுனன். இவரின் 17 வயதான மனவளர்ச்சி குன்றிய மகள் சிறப்பு பள்ளியில் பயின்று வந்தார். கடந்த 17.6.2017 அன்று சனிக்கிழமை என்பதால் பள்ளி விடுமுறை விடப்பட்டிருந்தது. தாயும், தந்தையும் கூலி வேலைக்கு சென்றுவிட மகள் தனியாக இருந்தார். பிற்பகலில் வீடு திரும்பிய பெற்றோர் அவரை தேடினர். அப்போது அர்ச்சுனனின் தொகுப்பு வீட்டில் வைத்து பாரதிதாசன்(29) என்ற வாலிபர், அர்ச்சுனன் மகளை பாலியல் பலாத்காரம் செய்து கொண்டிருந்தார். அர்ச்சுனனை கண்டதும் அந்த நபர் தப்பியோடினார். இதுகுறித்து கடலூர் மகளிர் போலீசில் அர்ச்சுனன் புகார் அளித்தார். அதன் பேரில் பாரதிதாசன் கைது செய்யப்பட்டார்.