சென்னை: 2018-19 ஆண்டுக்கான வருமானவரி கணக்கை ஆதார் இல்லாமல் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய வரும் 31-ம் தேதி கடைசி நாளாகும். இந்நிலையில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய ஆதார் எண் கட்டாயம் என்ற வருமான வரித்துறையின் அறிவிப்பை எதிர்த்து நித்யானந்த் ஜெயராமன், நாகலைலா உட்பட ஒன்பது பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பான்கார்டுடன் ஆதார் எண் இணைப்பு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருவதால், ஆதார் எண் இல்லாமல் வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய கோரி இருந்தனர்.