சென்னை : கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் ஆடி தள்ளுபடி விலையில் பட்டு சேலைகள் கண்காட்சி நடைபெறுகிறது. தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறையால் வருகிற 29ம் தேதி வரை ஆழ்வார்பேட்டை சங்கரா அரங்கத்தில் `பட்டு சேலைகளுக்கான ஆடி தள்ளுபடி சிறப்பு கண்காட்சி’ நடக்கிறது. இந்த கண்காட்சியை கைத்தறி மற்றும் துணிநூல் இயக்குநர் முனியநாதன் துவக்கி வைத்தார். மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் கண்காட்சியில், கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களின் மூலம் உற்பத்தி செய்யப்படும் தமிழ்நாட்டின் பிரசித்தி பெற்ற தூய சரிகை பட்டு சேலைகள் மற்றும் மென்பட்டு சேலைகள் கண்காட்சிக்கு கொண்டு வரப்பட்டுவிற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.