மேலக்கோட்டையூர் பகுதியில் 16.3 கோடியில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம்: முதல்வர் திறந்து வைத்தார்

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டம் மேலக்கோட்டையூரில் 16 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கத்தை முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் 16 கோடியே 3 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கம், நூலக கட்டிடம், ஆராய்ச்சி கூடம், கருத்தரங்க கூடம் மற்றும் தியான மண்டபம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமை செயலகத்தில் நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.    

நிகழ்ச்சியில், விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி, தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், விளையாட்டு மேம்பாட்டு துறை முதன்மை செயலாளர் தீரஜ்குமார் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

Related Stories: