சென்னை: நீட் தேர்வு தொடர்பாக அமைச்சர், அதிகாரிகள் உடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. தமிழில் நீட் தேர்வு எழுதியவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டிருந்தது. ஐகோர்ட் உத்தரவை அடுத்து கவுன்சிலிங்கில் ஏற்பட்டு உள்ள குழப்பம் குறித்து விவாதம் நடைபெற்று வருகிறது. நீட் தேர்வை தமிழில் எழுதிய மாணவர்களுக்கு 196 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரைக் கிளை உத்தரவிட்டது. மேலும் இதற்கான காரணம் குறித்து கண்டறிந்து அதற்கான காரணம் குறித்து விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.