கோவை: மத்திய அரசு பணி என கூறி போலி பணி நியமன ஆணை, அடையாள அட்டை உள்ளிட்டவற்றை வழங்கியதாக இருவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை காவல் கண்காணிப்பாளரிடம் வடவள்ளியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் அளித்துள்ள புகாரில் ரூ.11 லட்சம் வரை பண மோசடி செய்ததாக ஈஸ்வர் ராமசந்திரன், குமரேசன் ஆகியோர் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.