காரைக்குடி: காரைக்குடியில் ரூ.2.70 கோடி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பணம் சிக்கிய வழக்கில் அமலாக்கத்துறையினர் விசாரணையை தொடங்கினர். காரைக்குடி காந்திபுரத்தை சேர்ந்த தொழிலதிபர் சுப்ரமணியன் தனது பணம் ரூ.40 லட்சம் காணாமல் போனதாக போலீசில் புகார் அளித்தார். இது தொடர்பான விசாரணையில் அவரது கார் ஓட்டுநர் நாராயணன் உள்ப்பட மூன்று பேரை கைது செய்ய போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.2 கோடி அளவிற்கு இந்திய பணத்தையும், ரூ.70 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தையும் பறிமுதல் செய்தனர்.